கன இராகங்கள்x Y1601ea Mm&;sLpe0,0u89y12g H P;aatSs ns9AaGPU#gake
கன இராகங்கள் எனப்படுபவை கருநாடக இசையில் தானம் (கனம்) அல்லது மத்யம காலம் பாடுவதால் அல்லது வாசிப்பதால் எளிதாக வெளிப்படும் இராகங்கள் ஆகும். கனராகங்கள் இரு வகைப்படும். அவை:
- கனபஞ்சக இராகங்கள்
- திவிதிய கனபஞ்சக இராகங்கள்
கனபஞ்சக இராகங்கள்[தொகு]
தானத்தினால் பிரகாசிக்கும் இராகங்கள் கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :
- நாட்டை
- கௌளை
- ஆரபி
- வராளி
- ஸ்ரீராகம்/சிறீராகம்
இவ் ஐந்து இராகங்களிலும் நுட்ப சுருதிகள், கமகங்கள், அல்பத்துவ துர்லப ஸ்வரப் பிரயோகங்கள் முதலியன காணப்படும். இவ் ஐந்து கனராகங்களிலேயே தியாகராஜ சுவாமிகள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
திவிதிய கனபஞ்சக இராகங்கள்[தொகு]
கனபஞ்சக இராகங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் ஐந்து இராகங்களும் திவிதிய கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :
- கேதாரகௌளை
- ரீதிகௌளை
- நாராயணகௌளை
- சாரங்கநாட
- பௌளி